சுயம்

நாமே என்பதன் பொருள், நம்முடைய ஒத்துழைப்பின்றி நம்மை யாரும் மாற்ற முடியாது என்பதுதான்.

சுய சிந்தனை என்பதை தப்பாக அர்த்தம் கொண்டு, யார் சொல்வதையும் கேட்காமல் வாழ்வது, முதிர்ச்சியற்ற முற்சாய்வுதான்

மலர வேண்டுமெனில், மலர் திறக்க வேண்டும், மனமும்தான்.

நம்மை நாம்தான் செதுக்கிக்கொள்ள முடியும். எனினும், மற்றவர்களின் சிந்தனைகள் சிறந்த உளியாகப் பயன்படும். பழையவற்றையே புதிதாக் கண்டுபிடித்து, நேரத்தை வீணாக்கும் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது மாபெரும் கண்டுபிடிப்பு. ஆனால் அதையே இன்று ஒருவன் சிந்தித்து கண்டுபிடித்தால் அது கால விரயம். வாழ்வு விரயம்.

No comments: